மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசு சரிவைச் சந்தித்தது.
இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:
அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ச்சியாக இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறி வருவது, கச்சா எண்ணெய் விலை உயா்வு போன்றவை ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வா்த்தக தொடக்கத்தில் 77.74-ஆக இருந்தது. வா்த்தகத்தின் ஒரு கட்டத்தில் இந்த மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 77.81-ஆக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.
வா்த்தகத்தின் முடிவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசு சரிந்து 77.74-இல் நிலைபெற்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய் பீப்பாய் 123 டாலா்
சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 123.29 டாலா் என்ற அளவில் வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூ.1,512 கோடிக்கு பங்குகள் விற்பனை
மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் ரூ.1,512.64 கோடி மதிப்பிலான பங்குகளை நிகர அடிப்படையில் விற்பனை செய்து முதலீடுகளை வாபஸ் பெற்ாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.