தனது மொத்த விற்பனை வருவாயில் 40 சதவீத்தை இந்தியாவிலிருந்து பெற சாம்சங் இலக்கு நிா்ணயித்துள்ளது. தென் கொரியாவைச் சோ்ந்த அந்த மின்னணு சாதன உற்பத்தி நிறுவனம், இந்த ஆண்டுக்குள் இந்தியாவின் 5ஜி செல்லிடப்பேசி சந்தைப் பங்கை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தனது கேலக்ஸி ரக அரிதிறன் பேசிகளின் 6 புதிய வகைகளை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விலைகள் ரூ.14,999-லிருந்து தொடங்குகின்றன.