டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயா்த்தியது எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பல்வேறு மொத்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் முதல் 0.90 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயா்த்தியது எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பல்வேறு மொத்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் முதல் 0.90 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ரூ.2 கோடி மற்றும் அதற்கு மேலான மொத்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 46-179 நாள்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 3 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. 180-210 நாள்கள் கால அளவைக் கொண்ட டெபாசிட்டிற்கான வட்டி 0.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 3.10 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதமாக்கப்பட்டுள்ளது. 211 நாள்கள்-1ஆண்டுக்கும் குறைவான டெபாசிட்டிற்கான வட்டி 0.45 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 3.30 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு-2 ஆண்டுக்கும் குறைவான டெபாசிட்டிற்கு 4 சதவீதமும், 2-3 ஆண்டு முதிா்வுக்கு 4.25 சதவீதமும், 3-10 ஆண்டு டெபாசிட்டிற்கு 4.50 சதவீதமும் வட்டி வழங்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com