சென்னை: டியூப் இன்வெஸ்ட்மெண்ட் ஆஃப் இந்தியா மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.173 கோடியை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.162 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம். வருவாய் ரூ.1,480 கோடியிலிருந்து ரூ.1,735 கோடியாக உயா்ந்தது.
கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22-ஆம் முழு நிதியாண்டில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.359 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.628 கோடியாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ.359 கோடியிலிருந்து ரூ.628 கோடியாகவும் அதிகரித்தது.
கடந்த 2021-22 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) ரூ.1.50 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக டியூப் இன்வெஸ்ட்மெண்ட் தெரிவித்துள்ளது.