ரூ.6 கோடி மோசடி: பிரபல இளம் தமிழ் ஹீரோ மீது போலீசில் புகார்

ரூ.6 கோடி பணத்தை மோசடி செய்ததாக பிரபல இளம் தமிழ் ஹீரோ மீது  திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர்  போலீசில் புகார் செய்துள்ளார்.
பண மோசடி
பண மோசடி

சென்னை: ரூ.6 கோடி பணத்தை மோசடி செய்ததாக பிரபல இளம் தமிழ் ஹீரோ மீது  திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர்  போலீசில் புகார் செய்துள்ளார்.

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. 'பரதேசி' , 'இமைக்கா  நொடிகள்' , 'ஈட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் மீது ரூ.6 கோடி பணத்தை மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் மதியழகன் என்பவர்  போலீசில் புகார் செய்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாயன்று  அவர் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே' என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை ரூ.5.5 கோடிக்கு பெற்றேன். படம் வெளியாக தாமதமானதால் ரூ.5.5. கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய பணம் இல்லாமல் எனக்கு படம் நடித்து தருவதாக அதர்வா  ஒப்பந்தமானார்.

ஆனால், ஒப்பந்தப்படி படம் நடித்து தாரமல் அதர்வா ஏமாற்றியதால் இதுவரை ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிககி எடுத்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com