இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் நபர் இவர் தான்! 

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் நபர் இவர் தான்! 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி 90 நாட்களைக் கடந்த நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இருக்கின்ற

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி 90 நாட்களைக் கடந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இருக்கின்றனர்.

முதலில் ஓட்டுகள் அடிப்படையில் ஷெரின் தான் மிகவும் குறைவான ஓட்டுகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் தான் இந்த வாரம் வெளியேற்றப் படுவதாகவும் தகவல் வெளியானது. 

ஆனால், இந்த வாரம் சேரன் தான் வெளியேற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. இன்று வெளியான ப்ரோமோவின்படி, முதலில் ஷெரின் காப்பாற்றப்படுகிறார். அதைத் தொடர்ந்து கவின் காப்பாற்றப்படுகிறார். பின்னர், லாஸ்லியா மற்றும் சேரன் இருவரும் வெளியே வரும்படி கமல் ஹாசன் அழைக்கிறார்.

இதில் சில ட்விஸ்ட்களுடன்  லாஸ்லியா காப்பாற்றப்படுகிறார் என்றும் சேரன் தான் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்படுகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே சேரன் ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள்/ இருப்பவர்கள் கவின் மற்றும் லாஸ்லியாவை வெளியேற்ற வேண்டும் என்றே கூறி வரும் நிலையில் இந்த வாரமும் கவின் மற்றும் லாஸ்லியா காப்பற்றப்படுவது பிக் பாஸ் அன்றைய மற்றும் இன்றைய போட்டியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com