நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பந்தாரி இயக்கத்தில் கன்னட மொழியில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ' விக்ராந்த் ரோனா ' . கற்பனையும் சாகசமும் கலந்த அதிரடிப்படமாக சுதீப் திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை 3 டியில் வெளியிட இருப்பதால் அதற்கான தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று முடிந்ததை சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தார்கள்.
அடுத்த தகவலுக்காக காத்திருந்த நிலையில் , அப்படத்தின் நாயகி ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன்னுடைய இஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு " கதங் ராக்கம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சுதீப் உடன் விக்ராந்த் ரோனா படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சியைத் தருகிறது " எனத் தெரிவித்திருக்கிறார்.
இப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகிறது.