முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 267 நகரங்களில் 849 மையங்களில் கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 2,06,301 பேர் நீட் தேர்வு எழுதினர்.
இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | கங்குலி ராஜிநாமா செய்யவில்லை: பிசிசிஐ செயலர் ஜெய் ஷா
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. தேர்வில் தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
10 நாள்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு தேசிய தேர்வு வாரியத்திற்கு பாராட்டுகள்."
தேர்வு முடிவுகளைக் காண: இங்கே க்ளிக் செய்யவும்..