இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது ஏன்? நடிகை சாந்தி கிருஷ்ணா பதில்

பிரிவின் வலி எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டாது முறை வாய்ப்பு கிடைக்கும்போது...
இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது ஏன்? நடிகை சாந்தி கிருஷ்ணா பதில்

பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர், நடிகை சாந்தி கிருஷ்ணா. இவர், 1984-ல் நடிகர் ஸ்ரீநாத்தைத் திருமணம் செய்தார். 11 வருடங்களுக்குப் பிறகு, 1995- இருவரும் பிரிந்தார்கள். (2010-, ஒரு ஹோட்டலில், ஸ்ரீநாத் தற்கொலை செய்துகொண்டார்.)

பிறகு கொல்லம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சதாசிவனை 1998-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. இந்நிலையில் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சாந்தி – சாதாசிவம் ஆகிய இருவரும் பெங்களூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

விவாகரத்து குறித்து சாந்தி கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறியதாவது:

திருமணத்துக்காக என் நடிப்புத் தொழிலை இருமுறை கைவிட நேர்ந்தது. இந்நிலையில் இந்த வயதில் நடிப்புக்காக ஏன் என் கணவரையும் மகளையும் கைவிடவேண்டும்? சமூகவலைத்தளத்தில் உலவும் இதுபோன்ற செய்திகள் தவறானவை. யார் இதைச் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.

என்னுடைய முதல் திருமணமும் தோல்வியில் முடிந்ததுதான். எனவே பிரிவின் வலி எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டாவது முறை வாய்ப்பு கிடைக்கும்போது, நீங்கள் நல்லதொரு மாற்றத்தையே எதிர்பார்ப்பீர்கள். மீண்டும் பிரியத் தோணாது. எனவே என்னால் முடிந்தவரை ஒத்துப்போகப் பார்த்தேன். ஆனால் பிரிவு மீண்டும் நிகழ்ந்துவிட்டது. வாழ்க்கையில் நாம் எதிர்பாராதவையே நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com