இரண்டு மாதங்களில் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி

இன்னும் இரண்டு மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களில் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி
Published on
Updated on
1 min read

இன்னும் இரண்டு மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

காலா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புக்காக மும்பை சென்ற நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை (ஜூன் 8) சென்னை திரும்பினார்.

சுமார் 9 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் தனது ரசிகர்களை கடந்த மே மாதம் சந்தித்தார் நடிகர் ரஜினி. தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 18 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்த அவர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது அவரின் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வந்தன.

இதையடுத்து பா.ரஞ்ஜித் இயக்கத்தில் காலா படப்பிடிப்புக்காக கடந்த 29-ஆம் தேதி மும்பை புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், வியாழக்கிழமை சென்னை திரும்பினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காலா திரைப்படம் எனக்கு திருப்தி அளிக்கிறது. அடுத்தகட்ட ரசிகர்கள் சந்திப்பு இன்னும் இரண்டு மாதங்களில் இருக்கும். மீண்டும் வருகிற 24-ஆம் தேதி அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மும்பை செல்ல இருக்கிறேன் என்றார் ரஜினிகாந்த்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com