ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண்களுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்கிற வார இதழ் ஆசியாவின் இந்த வருடத்தின் 50 கவர்ச்சிகரமான பெண்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பிரியங்கா சோப்ராவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த மற்றொரு இந்திய நடிகை தீபிகா படுகோன் மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.
முதலிடம் பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா இதுகுறித்து கூறியதாவது:
இந்த விருதுக்காக என் தாய், தந்தைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். ஒவ்வொருமுறையும் எனக்கு வாக்களிக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.