2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வரும் எமி ஜாக்சன் சமீபத்தில் தனது டிவிட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். பிரபல மாடலாக இருந்து லண்டனிலிருந்து கோலிவுட்டில் நடிக்க வந்தவர் எமி ஜாக்சன். மதராஸ பட்டினம், தாண்டவம், தங்க மகன், தெறி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர்.
கோலிவுட்டில் இருந்தபடி பாலிவுட் படங்களான ஏக் திவானா தா, சிங் இஸ் பிளின்க், ப்ரீக்கி அலி போன்ற படங்களில் நடித்து வந்தார். டோலிவுட்டிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இந்நிலையில் எமி ஜாக்சனுக்கு சூப்பர் கேர்ள் எனும் ஆங்கில சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்காக அவர் சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சலஸுக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இது குறித்து எமி தனது டிவிட்டரில் 'இங்கு வந்த ஐந்து நிமிடத்திலேயே, 2018-ல் இது தான் என் வீடு என முடிவெடுத்துவிட்டேன்...யெஸ்ஸ்ஸ்ஸ்' எனப் பதிவிட்டுள்ளளார். அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு அடிக்கடி வந்து போவது சிரமம் என்பதாலும், சூபர் கேர்ள் சீரியலுக்கு தொடர்ந்து தேதிகளைக் கொடுத்ததாலும் எமி இனி இந்தியத் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்கிறது எமியின் வட்டாரம்.