புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாகச் செய்தி வாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் இருந்த பத்மபிரியா தொலைக்காட்சித் தொடரில் தற்போது நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்கிற தொடரில் வேணி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்தக் காரணத்தால் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.