பாலாவின் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் திரைப்படம் நாளை (16 பிப்ரவரி) வெளிவரவிருக்கிறது.
EON ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘B ஸ்டுடியோஸ்’மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசை - இளையராஜா.
பட அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து அனைவரின் கவனத்தையும் எதிர்ப்பார்ப்பையும் பெற்று வரும் நாச்சியாரில் நடிகை ஜோதிகா அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பாலா படத்துக்கே உரிய தீவிரத்தன்மையுடன் கூடிய வசனங்களும் ஜோதிகாவின் கதாபாத்திரமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சில மாதங்கள் முன்பு வெளியான இதன் முதல் டீஸர் ஜோதிகா பேசும் ஒரு வசைச் சொல்லால் கடும் அதிர்வினை ஏற்படுத்தி சர்ச்சைக்கும் கண்டனத்துக்கும் உள்ளானது. இந்நிலையில் நாச்சியார் படக் குழுவினர் வெளியிட்டுள்ள இந்த இரண்டாவது டீஸரும் மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளது என்று தமது அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
எல்லா சர்ச்சைக்கும் முற்றுப் புள்ளி வைக்குமா நாச்சியார்? அல்லது படமே ஒட்டுமொத்த சர்ச்சைக்கு உள்ளாகுமா என்பதை இன்னும் ஒரே நாள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.