சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத்.
லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 முதல் மும்பையில் தொடங்கும் என்று அறியப்படுகிறது. 2020 பொங்கல் சமயத்தில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சில நாள்களுக்கு முன்பு, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
இந்நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ரஜினி 167’ படத்தின் கதாநாயகியாக நயன்தாரா மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். படக்குழு குறித்து வெளியாகியுள்ள இதர தகவல்கள் தவறானவை என்று மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது கூறியுள்ளார்.