வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்கே நகர் படம் இந்த வாரம் 12-ம் தேதி வெளியாகவிருந்தது.
இந்நிலையில் அப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போவதாகப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்கே நகர் படம் 12-ம் தேதி வெளியாகவில்லை. தேர்தலுக்குப் பிறகு தான் படம் வெளியாகும் எனச் சொல்கிறார்கள் என்று இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோவில் பேசியுள்ளார் வெங்கட் பிரபு.