சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம்: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு 

சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது
சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம்: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு 

சென்னை: சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

சுந்தர்.சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்குப் பிறகு சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் முத்தையா இயக்கத்தில் 'தேவராட்டம்' படத்தில் கவுதம் கார்த்திக் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

எஸ்.டி.ஆருடன் முதல்  தடவையாக சேர்வதில் மிகுந்த ஆர்வத்துடனுள்ளோம். அதிக பெருட்செலவில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் நடிக்கிறார். படத்தை இயக்குனர் நார்தன் இயக்குகிறார். மதன் கார்க்கி பணியாற்றுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இயக்குனர் நார்தன்  கன்னடத்தில் `மஃப்டி' என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோல் இது நடிகர் சிம்புவின் 45-வது படமாக அமையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com