ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது: தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்

தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா சனிக்கிழமை மிகவும் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்று வருகிறது.
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த்
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிக்கத்தில் தர்பார் படம் தயாராகி வருகிறது. ரஜினி நடிப்பில் 167-ஆவது திரைப்படமாக உருவாகும் இதை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, அனிருந்த இசையமைத்துள்ளார்.

பொங்கலையொட்டி ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ள தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பாபர் நடித்துள்ளார். 

இந்நிலையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா சனிக்கிழமை மிகவும் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்த அரங்கை கொடுத்தற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் வரும் டிசம்பர் 12ம் தேதி எனது பிறந்த நாளை ரசிகர்கள் ஆடம்பரமாக  கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது எனவும் இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு நிகரான ஞானம் படைத்தவர்கள் யாரும் இல்லை என ரஜினிகாந்த் கூறினார்.

எல்லாவற்றிலும் எதிர்மறை கருத்துகள் அதிகம் பரவுகிறது எனவே அனைவரும் அன்பை பரப்புங்கள் என கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com