வெளிநாட்டில் பொன்னியன் செல்வன் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குனர் மணிரத்னம்

மணிரத்னத்தின் நீண்டகால கனவுப் படமான 'பொன்னியன் செல்வன்' படப்பிடிப்பு தாய்லாந்தின் காடுகளில் இன்று தொடங்கியது.
இயக்குநர் மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம்

மணிரத்னத்தின் நீண்டகால கனவுப் படமான 'பொன்னியன் செல்வன்' படப்பிடிப்பு தாய்லாந்தின் காடுகளில் இன்று தொடங்கியது.  படக்குழுவினர் சிலர் மற்றும் நடிகர்கள் அண்மையில் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பில், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி கலந்து கொள்ள, சில தினங்களில் விக்ரம் கலந்து கொள்வார். தோட்டா தரணி கலை இயக்கமும்,  ரவி வர்மன் ஒளிப்பதிவையும் செய்ய, கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற உன்னதமான நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் 'பொன்னியன் செல்வன்' திரைப்படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது, இந்தப் படம் இரண்டு பாகமாக எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயரம், அஸ்வின் ககமனு, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் 'பொன்னியன் செல்வன்' படத்தில் நடிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com