கடந்த பத்தாண்டுகளும் தனக்குச் சிறப்பாக அமைந்ததாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இந்த தசாப்தம் எனக்கு மிகசிறப்பாக அமைந்தது. எனக்கு அனைவரும் நன்கு உற்சாகம் அளித்தீர்கள். உங்களால் தான் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டேன்.
இந்த தசாப்தம், தேசிய விருதுடன் தொடங்கியது. நான் படம் இயக்கினேன், பிறகு அசுரனுடன் முடிந்தது. எனக்குப் பிடித்த பல படங்களில் நடித்தேன். ஒரு நடிகராக இதை விடவும் சிறந்த பத்தாண்டுகளை எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் ஜனவரி 16 அன்று வெளிவருகிறது. பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் தனுஷ். பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.