சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். முருகதாஸும் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு தான் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகப் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் தளபதி படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் சந்தோஷ் சிவன். அவர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, ஸ்பைடர் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.