நாங்கள் சந்தித்தோம், நன்குச் சிரித்துக்கொண்டோம், இத்தனை வருடங்களாகக் கண்ட நாள் முதல் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்துப் பேசிக்கொண்டோம். கண்டிப்பாக, இதன் அடுத்தப் பாகம் குறித்தும் விவாதித்தோம். எவ்வளவு நன்றாக இருக்கும் அது!
இப்படியொரு ட்வீட்டை வெளியிட்டு ஆர்வத்தைத் தூண்டியுள்ளார் நடிகர் பிரசன்னா.
இயக்குநர் ப்ரியா, பிரசன்னா, லைலா, இவாம் கார்த்திக் என கண்ட நாள் முதல் படக்குழுவினர் சந்தித்துப் பேசியதன் புகைப்படத்தைப் பகிர்ந்து இதுபோல கூறியுள்ளார் பிரசன்னா. லைலா, கார்த்திக்கும் இந்தச் சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கலாமா?