பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

தமிழ் திரைப்பட சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

தமிழ் திரைப்பட சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சி அமைப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஏற்கெனவே ஆர்.கே.செல்வமணி தலைமையில் செயல்பட்டு வந்த நிர்வாகத்தின் பணிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆர்.கே.செல்வமணி - டி.கே.மூர்த்தி ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே போட்டி நிலவியது. 65 பேர் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டது.
 தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 49 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டிகே.மூர்த்தி 16 வாக்குகள் மட்டுமே பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சண்முகம் 50 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரீம் சுந்தர் 15 வாக்குகள் பெற்றார்.
 பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுவாமிநாதன் 47 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சந்திரன் 18 வாக்குகளை பெற்றார்.ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com