புதிய சர்ச்சை: மகளிர் கல்லூரியில் அப்படி என்னதான் பேசினார் இளையராஜா?

இன்று இசையமைப்பாளர்களே கிடையாது என்று இளையராஜா பேசியது தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது...
புதிய சர்ச்சை: மகளிர் கல்லூரியில் அப்படி என்னதான் பேசினார் இளையராஜா?

இன்று இசையமைப்பாளர்களே கிடையாது என்று இளையராஜா பேசியது தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவொன்றில் இளையராஜா கலந்துகொண்டார். அப்போது அவர், இன்று கம்போஸர்களே கிடையாது என்று பேசியது தொடர்பாக சர்ச்சையும் குழப்பமும் எழுந்துள்ளன. மற்ற இசையமைப்பாளர்கள் குறித்து இளையராஜா இப்படிப் பேசலாமா என்று ஒருதரப்பும் இளையராஜா அதுபோல பேசவில்லை. திரித்துக் கூறுகிறார்கள் என்று இன்னொரு தரப்பும் இளையராஜா பேசியது குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதித்துவருகிறார்கள். இளையராஜாவின் இந்தப் பேச்சுக்கு அவரது சகோதரர் கங்கை அமரன் ட்விட்டரில் கூறியதாவது: மன்னிக்கவும். நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வரமுடியாது என்று கிண்டலுடன் பதில் அளித்துள்ளார்.

சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரி விழாவில் இளையராஜா பேசியது இதுதான்:

அப்போதெல்லாம் எப்படி கம்போஸிங் நடக்கும் என்றால் இப்போது போல இல்லை. மாணவிகளே, இப்போது வருகின்ற கம்போஸர்கள் எல்லாம் கம்போஸர்கள் இல்லை. இன்னைக்கு கம்போஸர்களே கிடையாதுங்கிறதை ஞாபகம் வைச்சுக்குங்க. இப்போது எல்லாம் சிடியோடு வருவாங்க. அங்க இருந்து இங்க இருந்து ஒண்ணை எடுத்து, இயக்குநருக்குப் போட்டு காட்டி, சார் இதுமாதிரி இருக்கலாமா எனக் கேட்பார்கள். இது மாதிரி இருக்கலாம். இது மாதிரி போடறேன்னு சொல்லிட்டு அதையே போட்டுருவாங்க. ஆனால் அந்தக் காலத்தில் நாங்கள் கம்போஸ் செய்யவேண்டும். பெர்பார்ம் பண்ணனும். நாங்க வாசிக்கணும். ஒவ்வொரு ஸ்வரமும் அமைச்சு அதை இயக்குநர் ஓகே செய்து அதற்குப் பிறகுதான் கவிஞரைக் கூப்பிட்டுப் பாட்டு எழுதவைப்போம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com