நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஒட்டு: பரிதாப 'மைக்' மோகன் 

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் 'மைக்' மோகன் பெயரில் கள்ள ஒட்டு போடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஒட்டு: பரிதாப 'மைக்' மோகன் 

சென்னை: தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் 'மைக்' மோகன் பெயரில் கள்ள ஒட்டு போடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஞாயிறன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.  முதலில் இந்த தேர்தல் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் அங்கு போதிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று காவல்துறை மறுத்துவிட்டது. 

இதனிடையே இடீர் திருப்பமாக நடிகர் சங்கத் தேர்தலைநடத்துவதற்கு தடை விதித்து பதிவுத் துறை தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதை எதிர்த்து விஷால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்  அந்த வழக்கில் சனிக்கிழமை இரவு அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் ஞாயிறு காலை துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் 'மைக்' மோகன் பெயரில் கள்ள ஒட்டு போடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்த 'மைக்' மோகன் பெயரில் ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com