நாளை நடைபெறுவதாக இருந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மார்ச் 3 அன்று ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் நடக்கவிருந்த ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மாண்புமிகு. நீதியரசர் கே.என். பாஷா-வின் ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.