தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ, அங்கிருந்துதான்!
முக நூலிலிருந்து....
• விட்டுவிட்டு நிழல்விழுந்த சாலையில்...
மொட்டை வெயிலடிக்கும்போதே தெரியும்,
நான்கு வழிச் சாலைக்கு
நிலத்துக்கு முன் கையகப்படுத்தப்பட்டது மரமென.
கவி வளநாடன்
• அக்கறையானவர்கள்
சுட்டிக்காட்டும்போதுதான்
தெரிகிறது...
நம்மிடமும் இத்தனை
குறைகளாவென்று.
செங்கான் கார்முகில்
• வாங்குபவன்
வாங்கும் நிலையிலேயே
இருக்க வேண்டும்
என்று நினைத்துக் கொடுப்பது...
வள்ளல் தன்மையில் சேராது!
வைகை ராஜன்
• மனிதனை ஆட்டிப்படைப்பதில்
முன்னிலை வகிப்பது பழக்கம்.
பழகியவருக்கு எத் தொலைவும் நடை தூரம் தான்.
பாதசாரி விஸ்வநாதன்
சுட்டுரையிலிருந்து...
• மெளனமாய்
வேண்டுவதால்
என்னவோ...
எம் வேண்டுதல்களை
செவிமடுக்காமலேயே
கடந்து விடுகிறார்
கடவுள்
கீர்த்தி
• என்றோ
இறந்திருந்தார்கள் மக்கள்...
ஆனாலும் இருந்து
வாழ்கிறார்கள் விதியே என்று.
ரெவித்தம்பி
• அறிவாற்றலின்
மிகப் பெரும் எதிரி
அறியாமையல்ல;
அறிவாற்றல் பெற்றுவிட்டதாக
நமக்கு நாமே முடிவு
செய்து கொள்ளுதல்தான்.
டேனியப்பா
• இப்படி ஆயிடுமோ அப்படி ஆயிடுமோ
என்று தவிர்ப்பதை விட...
என்ன ஆயிடும் என்று துணிவதே மேல்.
கெளசிகா
வலைதளத்திலிருந்து...
முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.
அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார்: "புயல் வருமானால் என்ன செய்வீர்?'' என்று. அவர் சொன்னார்: "நங்கூரத்தை நாட்டுவேன்'' "என்று.
"முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது. அப்போது நீர் என்ன செய்வீர் ?''
"நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்'' என்றார் அவர்.
இப்படி அது சென்று கொண்டு இருந்தது." பத்தாவது புயல் !"நஸ்ருதின் சொன்னார்: "நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்''
அந்த மனிதர் கேட்டார்:"ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர்?'"என்று. அதற்கு நஸ்ருதின் சொன்னார்:
"தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ... அங்கிருந்துதான்'' "
http://tharaganesan.blogspot.com/