பாகுபலி படத்தை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. இந்தியத் திரையுலகில் மகத்தான வெற்றி கண்ட, அதிக வசூல் கண்ட படங்களில் அதுவும் ஒன்று.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
அதன்படி பாகுபலி படத்தின் முதல் பாகம் (தமிழ்) வரும் வெள்ளியன்று தமிழ்நாடு முழுக்க வெளியாகவுள்ளது. ஏற்கெனவே திரையிலும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் படத்தைப் பார்த்துவிட்ட ரசிகர்கள் இன்னொருமுறை ஆதரவு தருவார்களா?