ஜோதிகா நடிப்பில் 2015-ல் 36 வயதினிலே மற்றும் 2017-ல் மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு கடந்த 2 வருடங்களாகத் தலா 3 படங்களில் நடித்துள்ளார் ஜோதிகா. கடைசியாக ஜாக்பாட் வெளியானது. அடுத்த மாதம் தம்பி வெளிவரவுள்ளது.
தம்பிக்கு அடுத்ததாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தின் படப்பிடிப்பும் நிறைவுபெற்றுவிட்டது. இந்நிலையில் ஜோதிகாவின் புதிய படத்துகான பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - வேல்ராஜ். கத்துக்குட்டி படத்தை இயக்கிய ஆர். சரவணன், இப்படத்தை இயக்கவுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் இப்படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றது.