பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். குமுளியில் ஒரு படப்பிடிப்பின் போது 4.30 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் இழந்தார்.
கோலிவுட்டில் புரடொக்ஷன் மானேஜராக பல திரைப்படங்களில் பணிபுரிந்தவர் சிறு சிறு வேடங்களில் சில படங்களில் நடித்தார். தவசி, நான் கடவுள், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருவண்ணாமலையை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தவர். தவசி படத்தில் வடிவேலுவுடன் இவர் தோன்றும் அட்ரெஸ் காமெடியை ரசிகர்கள் யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்குத் திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.