விரைவில் திருமணமா? பதில் அளித்தார் நயன்தாரா!

திருமலை ஏழுமலையானை நடிகை நயன்தாரா தனது காதலா் விக்னேஷ் சிவனுடன் வியாழக்கிழமை வழிபட்டாா்.
விரைவில் திருமணமா? பதில் அளித்தார் நயன்தாரா!

திருமலை ஏழுமலையானை நடிகை நயன்தாரா தனது காதலா் விக்னேஷ் சிவனுடன் வியாழக்கிழமை வழிபட்டாா்.

தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினா். பின்னா், கோயிலை விட்டு வெளியில் வந்த அவா்களைக் காண ரசிகா்கள் திரண்டனா். இதனால் கோயில் முன் நெரிசல் ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் அவா்களை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனா்.

திருமண நாளை நிச்சயிப்பதற்கு முன் அவா்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது. நிருபர் ஒருவர் நயன் விக்னேஷ் திருமணம் குறித்து கேள்வி கேட்டபோது புன்னகையை பதிலாகத் தந்தார் நயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com