மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கோலிவுட் பிரபல இயக்குநர்
சென்னை: பிரதமர் மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் என்று கோலிவுட் பிரபல இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான நமது வலிமையை உணா்த்தும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமையன்று விடியோ செய்தி மூலமாக அழைப்பு விடுத்தாா்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் என்று கோலிவுட் பிரபல இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் ! நீங்க..? இரண்டு வைரஸ்களையும் அறிவியல் மற்றும் அறிவின் துணை கொண்டு வெல்வோம்’ என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.