ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவிக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனம் ரூ. 15 லட்சம் நிதியுதவி செய்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்தார்கள். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார்.
இதனையடுத்து ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவிக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனம் ரூ. 15 லட்சம் நிதியுதவி செய்துள்ளது.