செல்ல நாயை இழந்த சோகத்திலிருந்து மீண்டு வரும் விஜே ரம்யா!

தன்னுடைய செல்ல நாயை இழந்த சோகத்திலிருந்து தான் மீண்டு வருவதாக விஜே ரம்யா கூறியுள்ளார்.
படம் - instagram.com/ramyasub/
படம் - instagram.com/ramyasub/

தன்னுடைய செல்ல நாயை இழந்த சோகத்திலிருந்து தான் மீண்டு வருவதாக விஜே ரம்யா கூறியுள்ளார்.

இன்ஸ்டகிராமில் ஒரு வாரம் முன்பு செல்ல நாயை இழந்தது குறித்து அவர் எழுதியதாவது:

என் செல்ல நாய் மைலோ உடல்நலக்குறைவிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவினால் மிகவும் அவதிப்பட்ட மைலோவைக் கண்டு நான் மிகவும் மனச்சோர்வு அடைந்தேன். அதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. என்னுடைய ஒரு பகுதி என்னை விட்டுச் சென்றுவிட்டது. அளவற்ற அன்பை வழங்கிய ஜீவன் தற்போது உயிருடன் இல்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மைலோ என் குழந்தை, எப்போதும் என் டார்லிங். எந்த மனிதனும் வழங்காத மகிழ்ச்சியை நீ அளித்தாய் மைலோ. யாரை விடவும் நீ தான் என்னைப் பாதுகாத்தாய். உன்னை என் வாழ்நாள் முழுக்க நினைத்துக்கொள்வேன். உன்னை வேறொரு நாளில் இன்னொரு உலகில் சந்திப்பேன் என்று உருக்கமாக எழுதியுள்ளார். நீதான் எப்போதும் என் குழந்தை, என் ஆன்மாவை இழந்துவிட்டேன், நீ இப்போது கடவுள் ஆகிய ஹாஷ்டேக்குகளையும் தன் பதிவில் இணைத்திருந்தார்.

தற்போது இன்ஸ்டகிராமில் அவர் எழுதியுள்ளதாவது:

நிதர்சனத்தை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். புகார் சொல்வதை நிறுத்தியுள்ளேன். நல்ல நிலைமையில் இருப்பதற்காக உண்மையுடன் இருக்கவேண்டும். சின்னச் சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியைத் தேடவேண்டும் என்று எழுதியுள்ளார்.

வீட்டைச் சுத்தம் செய்தபடி, மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் விடியோவையும் அவர் இணைத்துள்ளார். இந்த விடியோவைப் படமாக்கும்போது என் அம்மா முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தென்பட்டது. இதற்காக இதைப் பலமுறை செய்வேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com