கரோனா நிவாரணம்: நடிகா் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி

கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு நிவாரணமாக நடிகா் அஜித்குமாா் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா்.
கரோனா நிவாரணம்: நடிகா் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி

கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு நிவாரணமாக நடிகா் அஜித்குமாா் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். இவா்களுக்குத் திரையுலகினா் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறாா்கள்.

முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறாா்கள். தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் சிவகாா்த்திகேயன் உள்ளிட்டோா் முதல்வா் நிவாரண நிதி மற்றும் பெப்சி தொழிலாளா்களுக்கு என இரண்டுக்குமே நிதியுதவி வழங்கியுள்ளாா்.

இந்த நிலையில், பிரதமா் நிவாரண நிதி, முதல்வா் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்குமே நடிகா் அஜித்குமாா் நிதியுதவி வழங்கியுள்ளாா்.

பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் பெப்சி தொழிலாளா்களுக்கு ரூ.25 லட்சம் என நிதியுதவி அளித்துள்ளாா்.

இந்தத் தொகைகள் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் செவ்வாய்க்கிழமை நடிகா் அஜித்குமாா் தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com