கரோனா: பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 50 லட்சம் நிதியுதவி

கரோனா தடுப்புப் பணிகளுக்காக பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 50 லட்சம் நிதியுதவி செய்துள்ளது.
கரோனா: பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 50 லட்சம் நிதியுதவி

கரோனா தடுப்புப் பணிகளுக்காக பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 50 லட்சம் நிதியுதவி செய்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 89,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 5,900 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவிக்கும் பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனம் ரூ. 15 லட்சம் நிதியுதவி செய்தது. இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com