இயக்குநர் செல்வராகவனின் உதவி இயக்குநரான சுஜாவின் திருமணம் இன்று நடைபெற்றது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 27,900 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுஜாவின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுஜாவின் இல்லத்திலேயே திருமணம் நடைபெற்றது. மணமகன் அரவிந்த் குமார் மற்றும் மணமகள் சுஜாவின் பெற்றோர்கள் மட்டும் இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.