நம்பிக்கை இருந்தால் சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையும் என நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
இன்ஸ்டகிராம் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் அனுஷ்கா சர்மா. சந்தோஷமான திருமண வாழ்க்கைக்குக் காரணம் என்ன என்கிற கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு அனுஷ்கா சர்மா பதில் அளித்ததாவது:
நம்பிக்கை. காதல் என்பது இருவருக்கும் இடையிலான அன்பை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் நல்ல உறவு என்பது கடமையை உணர்தல் ஆகும். வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் நல்ல புரிதல்கள் உண்டாகும். இதன்மூலம் சிறந்த மனிதராக நாம் மாற முடியும் என்று கூறியுள்ளார்.