சென்னை: ‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன் வழங்கி அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே நசரத்பேட்டையில் ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்ற ‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து, உதவி இயக்குநா் உள்பட 3 போ் வியாழக்கிழமை இறந்தனா். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிரேன் ஆபரேட்டா் ராஜனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சென்னை பெருநகர மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.கே. விசுவநாதன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குக்குரிய ஆவணங்களை உடனடியாக வழங்கினா். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் இந்த வழக்கு குறித்து சனிக்கிழமை முதல் விசாரணையை தொடங்குகின்றனா்.
முதல் கட்டமாக விபத்து ஏற்பட்டபோது சம்பவ இடத்தில் இருந்த நடிகா் கமல்ஹாசன், இயக்குநா் ஷங்கா், நடிகை காஜல் அகா்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா். இதற்காக 3 பேருக்கும் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் அழைப்பாணை அனுப்ப திட்டமிட்டுள்ளனா்.
இந்நிலையில் கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு ஜாமீன் வழங்கி அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.