காமெடி கதையில் நடிக்க ஆவலுடன் உள்ளேன்: அருண் விஜய் பேட்டி

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதோடு தமக்கென உள்ள பாணியில் தொடர விரும்புவதாக பிரபல நடிகர் அருண் விஜய் கோவையில் தெரிவித்துள்ளார்.
காமெடி கதையில் நடிக்க ஆவலுடன் உள்ளேன்: அருண் விஜய் பேட்டி

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதோடு தமக்கென உள்ள பாணியில் தொடர விரும்புவதாக பிரபல நடிகர் அருண் விஜய் கோவையில் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய  “மாஃபியா – பாகம் 1” படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் படத்தின் நாயகன் அருண் விஜய் கோவையில் படம் வெளியாகியுள்ள திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை வெற்றி படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அடுத்தடுத்து நல்ல குடும்பக் கதை மற்றும் காமெடி கதைகள் அமைந்தால் நடிக்க ஆவலுடன் உள்ளேன். எனக்கென்று தற்போது உருவாகியுள்ள இந்த ஸ்டைலை நானும் விரும்புகிறேன்.

நல்ல கதையம்சம் இருந்தால் மற்ற நடிகர்களுடனும் இணைந்து நடிப்பதில் தவறில்லை. அதேநேரத்தில் எனக்கென உள்ள பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை தொடர விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com