கரோனாவுக்கு சிகிச்சை பெறும் அமிதாப் பச்சன்: தற்போதைய நிலை என்ன?

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குறைந்தது ஏழு நாள்களாவது மருத்துவமனையில்...
கரோனாவுக்கு சிகிச்சை பெறும் அமிதாப் பச்சன்: தற்போதைய நிலை என்ன?

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குறைந்தது ஏழு நாள்களாவது மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா நோய்த்தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதுதொடா்பாக ட்விட்டரில் அமிதாப் பச்சன் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது: நான் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினா், பணியாளா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளது. என்னை கடந்த 10 நாள்களில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் மேலும் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது.

மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

அமிதாப் பச்சன் குடும்பத்தில் உள்ள நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் ஜல்ஸா, பிரதிக்‌ஷா, ஜனக், வத்சா ஆகிய நான்கு பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன. பங்களாக்கள் உள்ள பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. ஜல்ஸா பங்களாவின் வெளியே கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்கிற அடையாள வில்லை ஒட்டப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்த 28 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அமிதாப் பச்சனின் ஜல்ஸா பங்களாவில் உள்ள 26 பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் உறுதியாகியுள்ளது. எனினும் பாதுகாப்பு கருதி அந்த 26 பேரும் அடுத்த இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குறைந்தது ஏழு நாள்களாவது மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் நல்ல உடல்நிலையுடன் உள்ளார். அவருக்குத் தற்போது இருமல் குறைந்துள்ளதாகவும் ஆக்ஸிஜன் அளவுகள் சரியாக உள்ளன. அமிதாப்பின் வயதைக் கருத்தில் கொண்டு மருந்துகளும் குறைந்த அளவிலேயே வழங்கப்படுகின்றன. 

மருத்துவமனையில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குறைந்தது ஏழு நாள்களாவது மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும். தந்தை, மகன் ஆகிய இருவருக்கும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். மேலும் அடுத்த 5, 6 நாள்களில் இருவருக்கும் மற்றொரு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com