பாகுபலி பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் ராஜமௌலி பதிவிட்டிருப்பதாவது:
"எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் சில நாள்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் அது தானாவே சரியானது. எனினும், நாங்கள் கரோனா பரிசோதனை செய்தோம். பரிசோதனையின் முடிவில் எங்களுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நாங்கள் வீட்டிலேயே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
எவ்வித அறிகுறியும் இல்லாமல், நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம். ஆனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வருகிறோம். பிளாஸ்மா தானம் செய்ய காத்திருக்கிறோம்." என்றார் ராஜமௌலி.