சர்ச்சைக்குரிய பேட்டி: சிங்கமுத்து, மனோபாலா மீது வடிவேலு புகார்

நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நடிகர் சங்கத்திடம்...
சர்ச்சைக்குரிய பேட்டி: சிங்கமுத்து, மனோபாலா மீது வடிவேலு புகார்

யூடியூப் பேட்டி தொடர்பாக நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நடிகர் சங்கத்திடம் வடிவேலு கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் மனோபாலாவின் யூடியூப் சேனலுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டியளித்தார். அப்போது, நடிகர் வடிவேலு பற்றி சில கருத்துகளை சிங்கமுத்து தெரிவித்தார். அது தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

இதையடுத்து நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் வடிவேலு கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். நடிகர் மனோபாலாவின் யூடியூப் சேனலில் நடத்திய பேட்டியில் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரசாரங்கள் செய்தும் பதில் அளித்துள்ளார் சிங்கமுத்து.

அந்த விடியோவை, பல பிரபல நடிகர்கள் உள்ள எஸ்.ஐ.ஏ.ஏ. லைஃப் மெம்பர்ஷிப் என்கிற வாட்சப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எனவே மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என வடிவேலு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com