இணையம் வழியாக கமல் ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் வரும் வியாழன் அன்று உரையாடவுள்ளார்கள்.
கடந்த மாதம் கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் இணையம் வழியாக உரையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். ஓபன் பண்ணா தளத்துடன் இணைந்து இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார்கள்.
இந்நிலையில் அடுத்த இணைய உரையாடலில் கமல் ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொள்கிறார்கள். தலைவன் இருக்கின்றான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, வரும் வியாழன் அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. அபிஷேக் ராஜா தொகுத்து வழங்குகிறார். உரையாடலின் நேரலையை கமல் ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் சமூகவலைத்தளப் பக்கங்களில் காண முடியும்.