நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மது பாட்டில்கள் பறிமுதல்

சோதனையின்போது ரம்யா கிருஷ்ணனின் காரில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மது பாட்டில்கள் பறிமுதல்

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர்த்து தமிழ்நாட்டின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன சோதனை செய்துகொண்டிருந்த கானத்தூர் காவல்துறையினர், அங்கு வந்த இனோவா காரை பரிசோதனை செய்தார்கள். காரில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், அவருடைய சகோதரி ஆகியோர் இருந்தார்கள். சோதனையின்போது ரம்யா கிருஷ்ணனின் காரில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரின் ஓட்டுநர் செல்வகுமாரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தார்கள். பிறகு செல்வகுமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com