கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுக்க திரைப்படப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்று காரணமாக மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளா்கள், தயாரிப்பாளா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டாலும் நடிகர்கள், தொழிலாளா்கள் ஆகியோரின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஓய்வில் இருக்கும் பிரபல நடிகை கத்ரினா கைஃப், தான் கிடார் கற்றுக்கொண்டு வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் அன்குர் திவாரியிடம் தான் கிடார் கற்றுக்கொண்டு வருவதாகவும் கத்ரினா கூறியுள்ளார்.