கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, சஞ்சீவ் கார்த்தி & ஆல்யா மானசாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ராஜா ராணி தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் காதலர்களான சஞ்சீவ் - ஆல்யா, கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு, ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பதை நவம்பர் மாதம் அறிவித்தார் சஞ்சீவ்.
இந்நிலையில் ஆல்யாவுக்குத் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். பப்பு குட்டிக்கு குட்டி பப்பு குட்டி என்று சந்தோஷத்துடன் இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்துள்ளார் சஞ்சீவி.