கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞா்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவு:
தமிழகத்தில் இருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞா்களையும், இசைக்குழுவினரையும், கோயில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவா்களையும் அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும். வாழ்வாதாரமில்லா நிலையில், அவா்களும் கவலையின்றி பசியாறுவா் என்று அவா் கூறியுள்ளாா்.