ஊரடங்கு விதிகளை மீறியதற்காக நடிகை பூனம் பாண்டே மீது மும்பைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், பூணம் பாண்டே இதை மறுத்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில், காரணமின்றி மும்பை மரைன் டிரைவ் பகுதியில் காரில் சுற்றியதற்காக பூனம் பாண்டே மீது மும்பைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் பூணம் பாண்டே இத்தகவலை அடியோடு மறுத்துள்ளார்.
இதுபற்றி சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்ததாவது:
நேற்று முதல் தொடர்ச்சியாகப் படங்களைப் பார்த்து வருகிறேன். அடுத்தடுத்து மூன்று படங்களைப் பார்த்தேன். ஆனால் நேற்றிரவு முதல் எனக்குத் தொலைப்பேசி அழைப்புகள் விடாது வருகின்றன. நான் கைதானதாக வெளியான செய்திகள் குறித்து விசாரிக்கிறார்கள். இதைச் செய்தியில் நானும் பார்த்தேன். என்னைப் பற்றி எழுதவேண்டாம். நான் வீட்டில் நலமுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.