உடற்பயிற்சி செய்தபோது காயம் ஏற்பட்டது தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே திரையுலகப் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் உடற்பயிற்சி செய்தபோது தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது:
இதை எப்போதும் செய்யவேண்டாம். உடற்பயிற்சிக்கு முன்பு உபகரணங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதுபோல கீழே விழுந்ததால் இரு முட்டிகளும் இரு வாரங்கள் வீங்கியிருந்தன. தலையில் அடிபடாமல் இருந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளரின் மேற்பார்வை இல்லாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இது ஒரு பாடம் என்று கூறியுள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் மாஃபியா படம் சமீபத்தில் வெளியானது. நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் மற்றும் பாக்ஸர், சினம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.